ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக  நீதிமன்றில் குவிந்த சட்டத்தரணிகள்!

கேகாலை நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் பலர் இன்று  குவிந்திருந்தனர்.  பல ஜனாதிபதி சட்டத்தரணிகள், நூற்றுக்கணக்கான சிரேஷ்ட மற்றும் இளைய சட்டத்தரணிகளால்  நிரம்பி கேகாலை நீதவான் நீதிமன்றம் காணப்பட்டது. 

ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக கேகாலை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் இவ்வாறு திரண்டிருந்தனர்.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாவோம் என சாலிய பீரீஸ் நேற்று அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *