பசிலுக்கு ஆசிவேண்டி சிறப்பு பூஜை வழிபாடு

பசில் ராஜபக்ஷவிற்கு ஆசிவேண்டி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

அத்துருகிரியவிலுள்ள விகாரை ஒன்றில் இன்று புதன்கிழமை போதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சரொருவரும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் களுத்துறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் உட்பட பலரும் இந்த பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

சில் ராஜபக்ஷவிற்கு நெருக்கமான சிலரும் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ தற்போது குணமடைந்துள்ள நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *