மக்களால் முற்றுகையிடப்பட்ட எம்பி வீட்டில் யானைகுட்டி செய்த குறும்பு

மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிபுன ரணவக்கவின் தெனியாய, களுகலஹேன பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு முன்பாக இன்று மாலை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து எம்பியின் வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

போராட்டகாரர்கள் இவரின் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக பேரணியாக சென்றதுடன் பின்னர் களுகலஹேனவில் உள்ள நிபுன ரணவக்கவின் வீட்டிற்கு முன்பாக 51 சந்தி வரை பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தோட்டத்தில் இவரால் வளர்க்கப்படும் செல்ல யானைக்குட்டி போராட்டக்காரர்களை உற்றுப் பார்த்துக்கொண்டு தும்பிக்கையுடன் ஆடி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *