‘கோட்டா கோ கிராமத்தில்’ இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

‘கோட்டா கோ கிராமத்தில்’ ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு இன்று அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தேவாலயங்களில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த எமது சக இலங்கையர்களின் நினைவாக கோட்டா கோ கிராமத்தில் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன, மத பேதங்களை கடந்து சகலரும், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மாவுக்காக பிராத்தனை செய்து, அவர்களின் நீதிக்காக குரல் கொடுக்கும்  சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *