ஐந்து நாட்களுக்குள் கொரோனாவில் இருந்து மீண்டுவந்த பசில்! சபையில் நலம் விசாரிப்பு

ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் காணப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பசில் ராஜபக்ஷ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.

எனினும், முன்னாள் அமைச்சர் தரப்பில் இருந்து இது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

பல்வேறு செய்திகளுக்கு மத்தியிலும் அவர் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, சபைக்கு வந்த பசிலிடம், நீங்கள் இப்போது நலமாக இருக்கிறீர்களா? என பாராளுமன்ற உறுப்பினர்கள் விசாரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *