உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

அத்துடன் கடந்த வருட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை நடைபெறும் என மேலும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *