
இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
அத்துடன் கடந்த வருட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை நடைபெறும் என மேலும் அவர் தெரிவித்தார்