ரம்புக்கனை சம்பவம்; எரிபொருள் பவுசர் சாரதி, உதவியாளர் வாக்குமூலம்..!

ரம்புக்கனை சம்பவத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பாக எரிபொருள் பவுசர் சாரதி மற்றும் உதவியாளர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய எரிபொருள் பவுசரின் சாரதியும் உதவியாளரும் நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

பவுசரின் உதவியாளர்,

“எரிபொருள் ஏற்றிக்கொண்டு காலை 10.30 மணிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து கிளம்பினோம்.12.30 அல்லது 1 மணிக்கு கூட்டுறவு சங்கத்திற்கு முன்னால் உள்ள ரம்புக்கனை பெட்ரோல் பங்கிற்கு சென்றோம்.

அப்போது எங்களுக்கு முன்னால் சென்ற பவுசர் வெகு தொலைவில் இருப்பதை பார்த்தோம். அதே நேரத்தில் நாங்கள் முன்னேற வேண்டியிருந்தது. சிலர் வந்து எங்களை முன்னோக்கி அழைத்துச் சென்றனர்.

“எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, எங்களுக்கு உணவளிக்கப்பட்டது, குடிநீர் கொடுத்தார்கள். இரண்டு பவுசர்களையும் அகற்ற பொலிசார் கடுமையாக முயன்றனர். இயலாத பட்சத்தில் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.”

பவுசர் சாரதி,

“நான் ஓட்டுநர் இருக்கையில் இருந்தபோது நான்கு சக்கரங்களிலும் மக்கள் காற்றைத் திறந்தனர், பவுசரை முன்னால் எடுக்குமாறு பொலிஸார் என்னிடம் தெரிவித்த போதும் என்னால் பவுசரை முன்னால் எடுக்க முடியவில்லை.” என தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *