
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இலங்கை முஸ்லீம் காங்கிரசின் உயர்பீடம் இன்று கூடவுள்ளது.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் கட்சியின் உச்சபீடம் இன்றையதினம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.