
மூதூர் – கிளிவெட்டி – மேம்காமம் பகுதியில், சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை வைத்திருந்த ஒருவருக்கு 25000 ரூபாய் அபராதம் விதித்து மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
குறித்த நபர் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை வைத்திருப்பதாக மூதூர் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
இதன் அடிப்படையில் குறித்த நபரை சோதனைக்குட்படுத்தியபோது 1 கிலோ 250 கிராம் மான் இறைச்சியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை மூதூர் நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தியபோது இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.