
தேசிய புத்தக தினத்தை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி இன்று நடைபெற்றது.
குறித்த கண்காட்சி நிகழ்வினை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் ஆரம்பித்து வைத்தார்.
கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி நூலகத்தின் ஏற்பாட்டில் முன்பள்ளி சிறார்கள் அழைக்கப்பட்டு குறித்த கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.