
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட, கிட்டத்தட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் இலங்கையை வந்தடையும் என்று அவர் கூறினார்.
இதேவேளை, இந்தோனேசிய அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் ரூ. 340 மில்லியன் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள், ஒரு வாரத்திற்குள் இலங்கை வந்தடையும் என அவர் தெரிவித்தார்.