
மட்டக்களப்பு,ஏப் 22
மட்டக்களப்பு – வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில், கேரள கஞ்சா, ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழு, இந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது, 31 வயதுடைய பெண் ஒருவர் 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள மற்றுமொரு வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.