சத்திரசிகிச்சை பிரிவு மே மாதம் திறக்கப்படும்! – கேதீஸ்வரன் தெரிவிப்பு

சாவகச்சேரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட விபத்து சத்திரசிகிச்சைப் பிரிவு மே மாதம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ .கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று சாவகச்சேரி மருத்துவமனையில் நடை பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ;

சத்திரசிகிச்சை பிரிவுக்கான ஆளணி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு ஜூன் மாதம் முழுமையாக இயங்கும், அதுவரை மருத்துவமனையில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி இயங்கும் .

சிகிச்சை பிரிவுக்கு மூன்று மாடிக்கட்டடம் அமைப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியது.

கட்டடத்தின் இரு மாடிகளின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் சாவ கச்சேரிப்பகுதியில் இடம்பெறும் விபத்துக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காகவே இந்த சிகிச்சை பிரிவுக்கட்டடம் திறக்கப்பட உள்ளது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *