புதிய தங்கக்கடனுக்கான முற்பணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வங்கிகளின் கடன் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி வீதங்கள் தொடர்பான அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி பங்குனி 11, 2022 திகதியிட்ட 2022 ஆம் ஆண்டின் பணவியல் சட்டத்தின் எண் 01இன் ஆணை 2.1ஐ ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணவியல் கொள்கை நடவடிக்கைகளை கடுமையாக்கும் இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய முடிவிற்கு இணங்க இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடனட்டைக்கான முற்பணம், புதிய முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக மேலதிக பற்று மற்றும் நடைமுறையிலுள்ள முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக மேலதிக பற்று, புதிய தங்கக்கடனுக்கான முற்பணம் மற்றும் புதுப்பிக்கப்படும் தங்கக்கடன் முற்பணம் என்பவற்றுக்கு நாணயக் கொள்கைகள் கடுமையாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வங்கிகளில் வைப்புக்களை ஈர்ப்பதற்காக வங்கிகளால் பின்பற்றப்பட்ட இறுக்கமான பணவியல் கொள்கை நடவடிக்கைகளுக்கு இணங்க வங்கிகள் வைப்பு விகிதங்கள் போதுமான அளவில் சரிசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *