வாய்ச்சண்டை கொலையில் முடிவு

ஹெம்மாதகம, ஏப் 23

ஹெம்மாதகம பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பலத்த காயமடைந்த ஹெம்மாதகம, தும்புலுவாவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *