ரிஷாத்தின் அனுமதியுடனேயே 20இற்கு கை தூக்கினோம்: முஷாரப்

கொழும்பு, ஏப் 23

தலைவரின் அனுமதியுடன் தான் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு வாக்களித்தேன் என்று இராஜாங்க அமைச்சர் முஷாரப் தெரிவித்தார்.

முடிந்தால் ரிஷாத் இதனை பொய்யென்று பகிரங்க வெளியில் சத்தியம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 க்கான வாக்களிப்பு நிகழ்ந்த இறுதித்தருவாயில் தொலைபேசி மூலமாக அரசாங்கத்தின் உச்ச அரசியல்வாதியுடம் பேசி மூவரையும் வாக்களிக்குமாறு பணித்த ரிஷாத் அந்த உச்ச அதிகாரத்திடம் நானும் வாக்களிக்கட்டுமா என்றும் கேட்டிருக்கிறார் அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம் என்று அதற்கு பதில் கிடைத்திருக்கிறது. எனவே என்னை வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லலிவிட்டார்கள் என்று பா.உ மர்ஜான் பளீல் உட்பட ஏனைய பாராளுமன்ற மூன்று உறுப்பினர்களிடம் தெரித்த அவர் நீங்கள் வாக்களியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த விடயத்தை பொய் என்று சத்தியம் செய்ய முடியுமா அரசியலில் ரிஷாத்தை நோக்கி வரும் பிரச்சினைகளை நானே முன்நின்று சமாளிப்பேன் என்று வந்தவன் நான். ஆனால் அவரின் செயற்பாடுகள் என்னை பாதிக்கிற போது நான் என்னை காப்பாற்ற வேண்டிய சூழலும் உருவானது.

அதனால் தான் என்னுடைய அரசியல் பயணமும் மாறியது. ஆகவே! பா.உ மர்ஜான் பளீல் மற்றும் பா.உறுப்பினர்களான எங்களிடமும் அவர் சொன்ன விடயங்கள் பொய் என்று சத்தியம் செய்வாரா? 20 க்கு நாம் சுயமாக வாக்களிக்கவில்லை எனவும், ரிஷாத் பதியுத்தீன் இரட்டை வேடம் போட்டு சமூகத்தை ஏமாற்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் முஷாரப் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *