கொரோனா மரணங்கள் வடக்கில் அதிகம்!

இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2.4 விகிதம் என்றும், அதில் வடக்கு மாகாணத்தில் 1.95 வீதம் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

சுகாதார நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றாமையே இவ்வாறான பாதிப்புக்களுக்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *