அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை புதன்கிழமை (22) திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாமலின் இந்த விஜயத்தின் போது, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிப்பு செய்ய உள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது .
இதன்படி, நாளை காலை 10 மணிக்கு திரியாய் பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகள் அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதோடு,
காலை10:40 மணிக்கு மொரவெவ நீர்ப்பாசன அபிவிருத்தி திட்ட மேற்பார்வை செய்யவுள்ளார்.
மேலும், காலை 11:10 க்கு குச்சவெளி சாந்திபுரம் யானை வேலைக்கான அடிக்கல் நிகழ்வு நடைபெற உள்ளதோடு, காலை 11. 45 மணிக்கு குச்சவெளி நாவற்சோலை கரப்பந்து விளையாட்டு மைதானம் திறந்து வைத்தல் மற்றும் கொங்ரீட் வீடமைப்பு தொகுதி தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
மாலை வேளையில், 12:15 மணிக்கு திருகோணமலையிலுள்ள
டொக்கியாட் துறை மேற்பார்வை செய்யப்படவுள்ளதோடு, மாலை 1. 40 மணிக்கு பிறகு வெள்ளை மணல் கரப்பந்து, கந்தளாய், சேருவில, வெருகல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரப்பந்து விளையாட்டு மைதானங்கள் திறந்து நீக்கப்பட உள்ளதோடு, காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழும் நடைபெற உள்ளது.
மேலும் கந்தளாயில் காணி உறுதி வழங்கல் நிகழ்வும் அதேபோன்று கந்தளாய் – கிண்ணியா களு கங்கை திட்ட பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





