
சீமெந்து விலையை ஒரு மூட்டைக்கு 450 ரூபாவாக உயர்த்தினால் கட்டுமான தொழில் வீழ்ச்சியடையும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
சீமெந்து மூடை ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கான தீர்மானம் இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் எனவும், விலை அதிகரிப்பின் பின்னர் ஒரு மூட்டை சிமெந்தின் விலை சுமார் 3000 ரூபாவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் பொருளாதாரம் நிலையற்ற தற்போதைய சூழ்நிலையில், கறுப்புச் சந்தை வியாபாரிகள் சிமெந்தின் விலையை உயர்த்தி வருகின்றனர்.
நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்பியபடி விலையை உயர்த்த உரிமை உண்டு.
கறுப்புச் சந்தை வணிகங்கள் கட்டுமானத் துறை மொத்தமாக வீழ்ச்சியடையவே விரும்புகின்றன. என்று அவர் கூறினார்.
மேலும் சந்தையில் சிமெந்தின் விலை உயரும் பட்சத்தில் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகளின் விலையும் உயரும் என அவர் குறிப்பிட்டார்.