உக்ரைனுக்கு அதிக தற்காப்பு இராணுவ உதவியை வழங்குகிறது பிரித்தானியா

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என உக்ரேனிய பிரதமருடன் தொலைபேசி அழைப்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார்.

அதன்படி பாதுகாப்பு வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் டாங்கிகளை அளிக்கும் ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வாரம் கியூவ்வில் உள்ள தனது தூதரகத்தை பிரித்தானியா மீண்டும் திறக்கும் என்றும் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

மேலும் இதன்போது உக்ரேனிய இராணுவ வீரர்கள் பிரித்தானியாவில் பெறும் பயிற்சிக்காக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜோன்சனுக்கு நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *