
கொழும்பு, ஏப் 24
போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொது போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய விடயங்கள் வழமையாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸாருக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொது போக்குவரத்து, அம்புலன்ஸ், பாடசாலை வாகனங்கள், அலுவலக சேவைகள், அத்தியாவசிய சேவை போக்குவரத்து ஆகியவற்றை தடையின்றி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.