ஜம்புப்பழம் சிக்கியதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு!

தொண்டையில் ஜம்புப்பழம் சிக்கியமையினால் மூச்சுத்திணறி 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குருநாகல் நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயதான தெனுரி கேஷலா இதுரங்கொட என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை ஜம்பு பழத்தினை சாப்பிட்டு விட்டு விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *