காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் 16வது நாளை இன்று எட்டியது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை இன்றையதினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடல் போராட்ட களம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இதேவேளை காலிமுகத்திடலிலும் தற்போது ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.


