அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி இன்று மாலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகி ஆர்ப்பாட்ட பேரணி காலிமுகத்திடலினை வந்தடைந்ததுடன் அங்கிருந்து அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



