113 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் நாளை பதவி விலகுவேன்! மகிந்த திடீர் திருப்பம்

தனக்கு ஆதரவான 113 எம்.பி.க்களின் கையொப்பம் கிடைக்காவிட்டால் நாளை (25) பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டினால் தான் பதவி விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர்
தெரிவித்திருந்தார்.

மஹிந்த, பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று ஆளுங்கட்சிக்குள் கையொப்பம் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில் இதுவரை 50 பேர்வரையான எம்பிக்கள் மட்டும் கையொப்பம் இட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *