
ராஜபக்சாக்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்து விபரங்கள் அனைத்தும் விரைவில் வெளிவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
உலகத்திலுள்ள தலைவர்கள் எவ்வளவு சொத்துக்களை சேகரித்து வைத்திருக்கின்றனர் என்று உலகில் பல்வேறு தரப்பினர் தகவல்களை திரட்டி வைத்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் இடம்பெற்ற போரின் போது,2008,2009 ஆம் ஆண்டு காலப்குதியில் அபகரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்கள்,நகைகள்,வெளிநாட்டு நிதிகள் எல்லாம்,ராஜ பக்ச குடும்பத்திடமே உள்ளது.
அவை வெளிநாட்டில் முதலீடுகளாக வைக்கப்பட்ட நிலையில், வெளிவந்துகொண்டு இருக்கிறது.
இது தவிர நாட்டு வளங்களை விற்று தனது குடும்பத்தை வளர்த்து வைத்திருக்கும்,ராஜ பக்ச குடும்பத்தின் சொத்து விபரங்களை “ஹக்கர்ஸ் ” இப்போது வெளிவிட்டுக்கொண்டு இருக்கின்றன.விரைவில் எல்லா சொத்து விபரமும் அம்பலமாகும் என்றார்.