
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோருக்காக வத்திக்கான் புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் ஒப்புக்கொடுக்கப்படும் விசேட திருப்பலியில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இணைந்து கொண்டுள்ளார்.
திருப்பலியில் கலந்து கொள்ள பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் சென்றுள்ளார்.
இதன்போது ஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களின் நினைவுச் சின்னத்தை பாப்பரசர் மல்கம் கர்தினால் ரஞ்சித்திடம் ஒப்படைத்தார்.