வடமாகாண ஆளுநரை சந்தித்த அமெரிக்க தூதுவர்

யாழ்ப்பாணம், ஏப் 25

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தை சந்தித்துள்ளார்.

இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இன்றைய பொருளாதார சவால்கள் மற்றும் வடமாகாணத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு எவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *