
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என்ன என்ற தலைப்பில் ஆங்கில ஊடகம் ஒன்று இணைத்தளம் வழியாக நடத்திய கருத்துக் கணிப்பில் கருத்து வெளியிட்டுள்ள 78.6 வீதமானவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவாக 11.8 வீதமனோர் கருத்து வெளியிட்டுள்ளதுடன், ஏனைய அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதற்கு 6.5 வீதமானோரே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
3.1 வீதமானோர் கருத்து கூற மறுத்துள்ளனர். குறித்த ஆங்கில ஊடகம் கடந்த 23 ஆம் திகதி இந்த கருத்து கணிப்பை நிறைவு செய்தது.
நாட்டில் 78.6 வீதமான மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ஜனாதிபதி பதவி விலகுவது என கூறியிருந்தாலும் ஜனாதிபதி அதனை நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.