சமூகங்களுக்கிடையில் நல்லுறவையும் எனைய மதங்களுக்கிடையிலான நல் ஒழுக்கங்களையும் பின்பற்றுகின்ற சமூக கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இஸ்லாமிய மதங்களின் புனிதத் தன்மையும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கின்ற நற்பண்பினையும் இஸ்லாமிய மரபு நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அவ்வாறான மனிதத்தன்மையினை போற்றுகின்ற தலைமுறையினர் எதிர்காலத்தில் முன்வரவேண்டும் அது காலத்தின் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் பணிமனையின் எற்பாட்டில் இப்தார் நோன்புதிறக்கும் நிகழ்வு யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில், யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி எ.சுபியான் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதில் இஸ்லாமிய குரானின் புனிதம், இப்தார் நோன்பின் முக்கியத்துவம் பற்றி உரையும் மௌலவிமார்கள் நிகழ்த்தினர்.
சர்வமதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர், வர்த்தக தொழிற்துறை மன்றத்தினர்கள், கல்வியாளர்கள், சமயத்தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



