நாட்டுக்கு வரவுள்ள எரிபொருள் அடங்கிய கப்பல்

கொழும்பு, ஏப் 25

டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய மேலுமொரு கப்பல் அடுத்த மூன்று நாட்களில் இலங்கையை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

டீசல், சுப்பர் டீசல், ஒக்டேன் 92 மற்றும் 95 வகையான பெற்றோல் மற்றும் மசகு எணணைய் என்பன போதுமான அளவு இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பல மாதங்களாக நீடித்து வந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காணப்பட்டவரிசைகள், தற்போது படிப்படியாகக் குறைந்துள்ளன. போதிய அளவு எரிபொருட்கள் கிடைத்தவுடன், இந்த நிலைமை முடிவுக்கு வரும் என்றும் அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

24 மணி நேர எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் செயல்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *