21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

கொழும்பு, ஏப் 21

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதுடன், முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான புதிய சீர்திருத்தங்களுடன் 20 மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 21ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், தற்போதைய கோரிக்கைகளுக்கு அமைய புதிய திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் உப குழுவொன்றை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *