21ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதுடன், முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான புதிய சீர்திருத்தங்களுடன் 20 மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 21ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்காக அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *