எரிவாயு விநியோக நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

கெரவலபிட்டி மற்றும் முத்துரஜவெல ஆகிய எரிவாயு முனையங்களில் இருந்து எரிவாயு விநியோக நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்த போதும், குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 7 ஆயிரத்து 200 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய இரு கப்பல்கள் இந்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 3 ஆயிரத்து 600 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த எரிவாயு கையிருப்பு நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மேலும் 3 ஆயிரத்து 600 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று 28 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *