
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்கு முன்னால் உள்ள கால்வாயில் தவறி விழுந்து ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் ஒரு வயதும் எட்டு மாதங்களுமான ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குழந்தையின் சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.