பிறந்த நாளில் விபத்து; இளைஞன் உயிரிழப்பு! – தெல்லிப்பழையில் சோகம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேலித்தூணுடன் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாவிட்டபுரம் தெற்கு-பட்டிக்கடவையைச் சேர்ந்த குணசேகரன் நிக்ஸன் (வயது 22)என்ற இளைஞனரே உயிரிழந்தவராவார். ரவிகரன் கனிஸ்டன் (வயது-20)என்ற இளைஞனர் காயமடைந்துள்ளார்.

வல்லை – அராலி பிரதான வீதியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கு அருகில் அம்பனை சந்திக்கு அண்மையில் நேற்று மாலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளது .

உயிரிழந்த இளைஞனின் பிறந்த நாள் நேற்றாகும்.உயிரிழந்த இளைஞனும் காயமடைந்த இளைஞனும் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற போது வேகக்கட்டுப்பாடடை இழந்து வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிள் ,வீதியோரத்திலிருந்த காணியின் சீமெந்திலான வேலித்தூணுடன் மோதியது.

சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *