ஐ.பி.எல்.: பஞ்;சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது சென்னை அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 38ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷிகர் தவான் 88 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், பிராவோ 2 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அம்பத்தி ராயுடு 78 ஓட்டங்களையும் 30 ருத்துராஜ் கெய்க்வாட் ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ராபாடா மற்றும் ரிஷி தவான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சந்தீப் ஷர்மா மற்றும் ஹர்ஸ்தீப் ஷர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஷிகர் தவான் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *