தமிழ் மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் இரா.சாணக்கியன் கோரிக்கை!(வீடியோ இணைப்பு)

தமிழ் மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சமூகம் மீடியாவின் விசேட நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி :நாட்டின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் ?

பதில் :இப்படியொரு பொருளாதார நெருக்கடி வரும் என்று ,கடந்த 2020 ஆம் ஆண்டு.4 ஆம் மாதமே ராஜபக்ச அரசுக்கு தெரியும்.ஆனால் அவர்கள் அதை பொருட் படுத்தாமல்,அந்நிய செலாவணியை கருத்தில் கொள்ளாமல்,நாட்டு வளங்களை விற்றல் ,கடன் பெறுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் நாட்டு இப்போது பாதாளத்துக்குள் சென்று விட்டது.

கேள்வி :சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய நிலைப்பாடு

பதில்:சர்வதேச நாணய நிதியம் வெறுமனே காசை மட்டும் விநியோகிக்கும் நிறுவனம் அல்ல.நாடு ஒன்றுக்கு கடனை கொடுப்பது என்றால்,நாட்டின் வருமானம்,கடன் விபரம் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து.அதற்கு ஏற்ற வகையில் கடனை வழங்கும்.அதிலும் இவ்வாறு வழங்கப்படும் கடன் எவ்வாறு மீள வருமான வந்து சேரும் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும்.தற்போது நாடு இருக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியம் தம்மால் இதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில்,இவர்கள் பணத்தை அதிகளவு அச்சடிக்கத் தொடங்கியுள்ளனர்.கருப்பு சந்தையில் அமெரிக்க டொலர் 450 ரூபா போகின்றது.

கேள்வி:தென்னிலங்கையில் இடம்பெறும் போராட்ட ?

பதில் :நாட்டை நாசமாக்கிய இவர்கள் ஜனாதிபதியாக இருப்பதற்கு தகுதி அற்றவர்.ஆகவே அவரை துரத்தி அடிப்பதற்கு நாமும் எமது பங்கை வழங்க வேண்டும்.தமிழ் மக்கள் போராட்டத்தில் போராட்டத்தில் பங்குகொள்ளவில்லை,ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்ற நிலை வந்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

கேள்வி:போராட்டத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?

பதில்:நாம் போர் காலத்தில் கஸ்டப்பட்டோம்.இப்போது மின்சாரம் இல்லாமலும்,எரிபொருள் இல்லாமலும் வாழ்வதற்கு எமது இளைஞர்கள் பெரும்பாலும் தயாராக இல்லை.ஆனால் சிங்கள இளைஞர்கள் நாம் அன்று பட்ட துன்பங்களை உணர்த்துக்கொண்டுள்ளனர்.ஆகவே எங்கே எல்லாம் நாம் கூறினால் எமது பிரச்சினை தீருமோ அங்கே எல்லாம் நாம் குரல் கொடுக்க வேண்டும்.நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட்டால் பாதி பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

கேள்வி:முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார்?

பதில்:அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை.அவர் செய்யும் வேலையை என்னுடைய வாயால் கூறமுடியாது.

கேள்வி:நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பதில்:இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.முதலில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.ஏனென்றால் நாட்டில் அமைதியான நிலை ஏற்பட்டால் ,சர்வதேசத்திடமும்,நாணய நிதியத்திடமும் கதைக்க முடியும்.நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *