
நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில வாரங்களாக டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்து வருகினறது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஏப்பிரல் 18 ஆந் திகதி தொடக்கம் ஏப்பிரல் 22 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 24 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 நோயாளர்களும், ஏறாவூர், கோரளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 05 நோயாளர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களும், செங்கலடி, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி மற்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு நோயாளர்களுமாக மொத்தம் 24 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும் கத்தான்குடி, வாழைச்சேனை, பட்டிப்பளை, வவுனதீவு, வாகரை மற்றும் ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
மேலும் மட்டக்களப்புமாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரை 307 பேர் டெங்குநோய்த் தாக்கத்திற் குட்பட்டுள்ளதாகவும் இதுவரை எவரும் மரணமடையவில்லை எனவும் பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.