45 கோடி பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர் – ராகுல்

இந்தியாவில் சுமார் 45 கோடி பேர் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ”ஒவ்வொரு குடும்பத்திலும், வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது என்பதுதான் புதிய இந்தியாவின் புதிய தாரக மந்திரமாக உள்ளது.

பிரதமர் மோடியின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளின் காரணமாக நாட்டில் சுமார் 45 கோடி பேர் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்.

கடந்த 75 ஆண்டுகளில் இவ்வாறு செயல்பட்ட முதல் பிரதமர் மோடிதான்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் 2.1 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக தெரிவிக்கும்  செய்தி ஒன்றையும் அவர் தனது ருவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *