
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்குவதற்கான அணியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் இணைந்துகொண்டுள்ளார் என தெரியவருகின்றது.
அரசுக்குள் உருவாகியுள்ள புதிய அணிக்கு அவரே தலைமை வழங்கிவருவதாகவும், ஜனாதிபதி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே அவர் செயற்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது அரசு பதவி விலக வேண்டும் என்ற யோசனை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ளது.