பணம் கொடுக்க மறுத்த மருத்துவரை குத்திக் கொன்ற யாசகர்

பணம் கொடுக்க மறுத்த மருத்துவர் ஒருவரை யாசகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவமொன்று தலங்கமவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஒருவர் விழுந்து கிடந்துள்ள நிலையில், அவர் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மாலபே, பொத்துஅராவ வீதியில் வசிக்கும் 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பல்பொருள் அங்காடியில் இருந்து வெளியேறும் போது அருகில் இருந்த யாசகருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யாசகர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *