
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்றையதினம் காலை யாழில் பெண் ஒருவர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், தற்போதைய உறுப்பினருமான ஜோகேஸ்வரி பற்குணராஜாவின் யாழ் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பாக குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
“கோ கோம் யோக ” என்ற பதாகையை தாங்கியவாறு,குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.