
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ,தைக்கும் தொழிலில் ஈடுபடுபவர் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்:
இந்த ஆர்ப்பட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது .இரண்டு கிழமையாக போராட்டம் இடம்பெற்றும் மக்களின் கதறல்கள் அவலங்கள் ஜனாதிபதியின் காதில் கேட்கவில்லை . மேலும் பொருட்களின் விலை குறைவதாக இல்லை .அரசிற்கு 10 வருடங்களின் பின்னும் ஆட்சியை விட்டுப்போகும் உணர்வு வராது.எதிர்ப்புகள் போதுமானதாக இல்லை.
போராட்டம் இன்னமும் வீரியம் பெற வேண்டும்.மக்கள் அதிகளவில் சேர வேண்டும் .இதற்கு ஒரு முடிவுகாண வேண்டிய நிலை கட்டயமானதாக உள்ளது .நம்பிக்கையில்லாப்பிரேரணையை கொண்டுவந்து எல்லாரையும் விரட்ட வேண்டும்.புதிய அரசாங்கம் ஒன்றை மக்கள் உருவாக்க வேண்டும்.இவை எல்லாம் திட்டமிட்டு நடைபெறுகிறது.எதிர்க்கட்சியும் இல்லை ஆளும் கட்சியும் இல்லை.எல்லோரும் அவர்கள் கூட்டுத்.ஆகவே நல்ல மனிதர் ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.