
கொழும்பு, ஏப்ரல் 27: ”என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கோரவில்லை. அவ்வாறானதொரு கோரிக்கையை அவர் விடுக்க மாட்டார் என்று நம்புகிறேன்’ என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அலரிமாளிகையில் பொதுஜன பெரமுண கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகரசபைத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்களுடனான சந்திப்பு இன்று புதன்கிழமை நடந்தது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறுகையில் “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு உதவிகளைப் பெறுவோம். இது தொடர்பாக தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். ”என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கோரவில்லை. அவ்வாறானதொரு கோரிக்கையை அவர் விடுக்க மாட்டார் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியிலிருந்து விலகக் கூடாது என உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.