30 மாதங்களில் நாட்டை வங்குரோத்தாக்கியது ராஜபக்ச குடும்பம்

30 மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பம் நமது நாட்டை வக்குரோத்து அடைந்த நாடாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் சஜித் கூறுகையில்,

இந்நாட்டின் தேசிய வளங்கள், தேசிய சொத்துக்கள், தேசிய நிதி என்பவற்றை திருட்டுத்தனமாக கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு இவ்வளவு வக்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஊழலையும் திருட்டையும் கட்டுப்படுத்தும் முகமாக சுதந்திரமான சக்தி வாய்ந்த ஒரு நிறுவன கட்டமைப்பை ஸ்தாபிப்பதாகவும், அதை எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு நிரந்தர நிறுவனமாக அதிகாரமளிக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமையப்பெறும் ஓரு அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே வழங்கப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எக்காரணத்தைக் கொண்டும் இந்நிலைப்பாடு மாறாது.

மக்களின் பணத்தை திருடிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டிக்கும் பொறுப்பு சார் அதிகாரம், முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேகாவிடம் கையளிக்கப்படும்.

வேறு எவருடனும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த டீலும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களுடனயே தனக்கு டீல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *