நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை,மற்றும் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் தொடர்பில் தாதியர்கள் கருத்து தெரிவிக்கையில்:
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் எரிவாயுப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளால் மக்கள் திண்டாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனைக் கண்டித்து அரசாங்கத்திற்க எதிராக நாடளாவிய ரிதில் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன.
அதற்கு ஆதரவு தெரிவிக்க முகமாக யாழ்ப்பாணத்தில் தாதியர் சங்கம் இணைந்து போராட்டத்தினை நடத்தியள்ளனர். குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினைக் கண்டித்தும், நோயாளர்களை பராமரிப்பதற்கு தேவையான மருந்து பொருட்களுக்கான தட்பாட்டினை அரசாங்கம் நிவர்த்தி செய்யக் கோரி பேராட்டங்களை கொள்கின்றோம் என்றனர்.
