டுவிட்டரை தொடர்ந்து கோகோ கோலா: எலான் மஸ்க் அசத்தல்

அமெரிக்கா,ஏப் 28

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் தற்போது கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை டெஸ்லா அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் வாங்கத் தயாராக இருப்பதாகவும், இதற்காக ட்விட்டர் நிறுவன பங்குதாரர்களைச் சந்தித்து அவர் பேசி வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ட்விட்டரை 44 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்.

இந்நிலையில், ட்விட்டரைத் தொடர்ந்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோகோ கோலா நிறுவனத்தை வாங்கி கோகோயினுடன் இணைக்கப் போவதாக எலான் மஸ்க் இன்று காலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்கரார்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவு அனைத்து தரப்பினரது மத்தியிலும் தற்போது பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *