பிரதமரும் அமைச்சரவையும் கலந்துகொள்ளாவிட்டால் ஜனாதிபதியின் சந்திப்பில் கலந்துகொள்வோம்- அரசில் அங்கம் வகித்த 11 கட்சிகள் தீர்மானம்
புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை ஜனாதிபதி தலைமையில் நாளையதினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சுயேச்சைக் கட்சிகளும் நிபந்தனைகளுடன் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்க இன்று(28) தீர்மானித்துள்ளன.
நாளை தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துக் கொள்வது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமரோ அல்லது அமைச்சரவையோ இன்றி தனிப்பட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவது என 11 கட்சிகளும் இன்று தீர்மானித்துள்ளன.