ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய அறிவித்தல் பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
